Saturday, May 2, 2020

துன்மார்க்கர் Vs நீதிமான்கள்


[எண்ணாகமம் 16 & 17 இலிருந்து தியானம்]

 

👎துன்மார்க்கர் மக்களின் மனதை கறைப்படுத்துகிறார்கள். (16:1,2)

👍 நீதிமான்கள் மக்களின் துன்மார்க்கத்தை எச்சரிக்கிறார்கள். (16:11,26; 17:10)

 

👎 துன்மார்க்கர் பெருமை, சுயநலம் மற்றும் பொறாமை ஆகியவற்றால் தூண்டப்படுகிறார்கள். (16:3,4)

👍 நீதிமான்கள் பணிவு மற்றும் தேவனை மையமாகக் கொண்ட வாழ்வினால் தூண்டப்படுகிறார்கள். (16:9)

 

👎 துன்மார்க்கர் திருப்தியடையாதவர்கள் மற்றும் நன்றியற்றவர்கள். (16:9,10,12)

👍 நீதிமான்கள் மனநிறைவுள்ளவர்களாகவும், தனிப்பட்ட லாபங்களுக்காக தங்கள் பதவியை பயன்படுத்திக் கொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள். (16:15)

 

👎 துன்மார்க்கர் தங்கள் அழைப்பையும் கர்த்தருக்குள் தங்கள் பிரதிஷ்டையையும் மறந்துவிடுகிறார்கள். (16:9)

👍 நீதிமான்கள் தாங்கள் சேவை செய்ய தேவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்கிறார்கள். (16:28)

 

👎 துன்மார்க்கர் மற்றவர்களின் முடிவையும் அழிவையும் தேடுகிறார்கள். (16:3,4,41)

👍 நீதிமான்கள் எதிர்ப்பவர்களின் நல்வாழ்வையும் நாடுகிறார்கள். (16:45,46)

 

👎 துன்மார்க்கர் எதிர்ப்பதற்கான வலிமையைத் திரட்டுவதற்காக மக்களிடம் திரும்புகிறார்கள். (16:2,42)

👍 நீதிமான்கள் தேவனிடம் திரும்பி, அவருடைய பலத்தைத் தேடுகிறார்கள். (16:42)

 

👎 துன்மார்க்கர் கீழ்ப்படியாதிருப்பதோடு, தலைமைத்துவத்தையும் தேவனையும் வெறுக்கிறார்கள். (16:13,14)

👍 நீதிமான்கள் மக்களுக்கு செவிசாய்த்து இணங்குவதோடு, தேவனுக்குக் கீழ்ப்படிகிறார்கள். (16:12,36,37,23; 17:1)

 

👎 துன்மார்க்கர் பதவியையும் தங்கள் பகுதியையும் தேடுகிறார்கள். (16:10,13,14)

👍 நீதிமான்கள் தேவனையும் அவருடைய விருப்பத்தையும் நாடுகிறார்கள். (17: 5)


No comments:

Post a Comment