Thursday, April 23, 2020

உண்மையாக இருத்தல்



[எண்ணாகமம் 5 & 6 இலிருந்து தியானம்]

👉கர்த்தரிடம் உண்மை நம்மைத் தீட்டுப்படுத்தாமலும் நம்மை தீட்டுப்படுத்தும் ஒவ்வொரு பாவங்களையும் நம்மை விட்டு வெளியேற்றுவதன் மூலமும் நாம் கர்த்தரிடம் உண்மையாய் இருக்க முடியும், ஏனெனில் கர்த்தர் நம்மில் வாசம் பண்ணுகிறார். (5:3; 6:7,8)

👉ஒருவருக்கொருவர் உண்மை ஒருவருக்கொருவர் மோசடி மற்றும் குற்றம் செய்யாமலும் இருத்தல் (5:5-7)

👉திருமண வாழ்வில் உண்மை உண்மையற்றவர்களாய் மாறாமலும் (தன் மனைவியிடமிருந்து அல்லது கணவனிடமிருந்து விலகிச் செல்வது) வழிதவறாமலும் (காம உறவை வளர்ப்பது) இருப்பதன் மூலம் திருமண வாழ்வில் உண்மையாய் இருக்க முடியும் (5:12)

👉தனிப்பட்ட வாழ்வில் உன்மை ஒழுக்கமான வாழ்க்கையை நடத்துவதன் மூலம் தனிப்பட்ட வாழ்வில் உண்மையாய் இருக்க முடியும் (6:3,4)

👉கடவுளின் சேவையில் உண்மை அர்ப்பணிப்புடன் வாழ்வதன் மூலம் மற்றும் செய்த அர்ப்பணிப்பை நிறைவேற்றுவதன் மூலம் தேவ சேவையில் உண்மையாய் இருக்க முடியும் (6:2,5)

No comments:

Post a Comment